ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையாடுவார்: மும்பை இந்தியன்ஸ் அணி

width="200"
வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் துவங்க இருக்கும் ஐ.பி.எல்-5 சீஸனின் அனைத்து போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் விளையாடுவார் என அந்த அணியின் செய்தித் தொடர்பாளர் இன்று மதியம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
 
இன்று காலை கிடைத்த தகவலின்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான சச்சின் தெண்டுல்கர் கால்விரல் சிகிச்சைக்காக லண்டன் சென்றிருக்கிறார் எனவும், அதற்காக ஆபரேஷன் அவர் செய்து கொள்ளப் போகிறார் எனவும், இதனால் இந்த ஐ.பி.எல். சீஸனில் சச்சின் தெண்டுல்கர் ஆடுவது சந்தேகமே என கூறப்பட்டது.
 
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
 
இந்த ஐ.பி.எல். சீஸனின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் தெண்டுல்கர் விளையாடுவார். அவர் தனது கால்விரல் ஆபரேஷனிற்காக செல்லவில்லை. மருத்துவரிடம் சில நாள் சிகிச்சைக்காகவும், ஆலோசனைக்காகவும் சென்றிருக்கிறார். மார்ச் 31 அன்று அவர் மும்பை திரும்புகிறார்.
 
திட்டமிட்ட படி ஏப்ரல் 3 அன்று சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் 5- ன் தொடக்க விழாவில் கலந்து கொள்வார். அதற்கு மறுநாள் நடைபெற இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதும் போட்டியில் விளையாடுவார். இன்று காலை வெளியான தகவல்களில் உண்மை இல்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India