உலகின் சிறந்த வீரர் தெண்டுல்கர்-கேத்தே பெர்ரி

width="200"

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கேத்தே பெர்ரி. ஐ.பி.எல். தொடக்க விழாவில் பங்கேற்று சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தாஜ் ஓட்டலில் தங்கி இருந்த அவர் கிரிக்கெட் வீரர் தெண்டுல்கரை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கேத்தே பெர்ரி கூறியிருப்பதாவது:-

தெண்டுல்கரை சந்தித்தது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அவர் உலகின் தலைசிறந்த கிரிகெட் வீரர்களில் ஒருவர் ஆவார். அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டது மகிழ்ச்சியான தருணமாகும்.

இந்த மகிழ்ச்சியை என் குடும்பத்தினருடனும் எனது நண்பர்களுடனும்  போன் மூலமாக பகிர்ந்து கொண்டேன். ஐ.பி.எல். தொடர் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India